Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடும் ரயிலில் பிரசவம், சமயோசிதமாக செயல்பட்ட பெண்கள்

ஓடும் ரயிலில் பிரசவம், சமயோசிதமாக செயல்பட்ட பெண்கள்
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (14:14 IST)
FILE
மும்பையில் ஓடும் ரயிலில் ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது, அந்த பெண்மணி பயணம் செய்த அதே ரயில் பெட்டியில் மூன்று நர்சுகள் பயணம் செய்ததால் கர்ப்பிணிக்கு ரயிலிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது.

மும்பையில் வசாய் எனும் இடத்திலிருந்து தாதருக்கு ரயில் சென்றுக்கொண்டிருந்தது. இந்த ரயிலின் லேடிஸ் கம்பார்ட்மெண்டில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்தார்.

குழந்தை பிறப்பு தேதி நெருங்குவதால் பொரிவ்லியிலுள்ள பகவதி மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருந்த அவருக்கு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டது.

ரயில் பெட்டியில் பிரசவ வலியால் துடித்த அவருக்கு அதே பெட்டியில் பயணம் செய்த மூன்று நர்சுகள் உதவி செய்தனர். ரயிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரமில்லாததால் ரயிலிலேயே பிரசவம் பார்க்க நேரிட்டதாக பிரசவம் பார்த்த நர்சுகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரயிலில் இத்தகைய இக்காட்டான சூழலில் பதட்டபடாமல் தாயையும், அழகான பெண் குழந்தையையும் காப்பாற்றிய நர்சுகளுக்கு பயணிகள் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil