பலத்த காயமடைந்த கல்லூரி மாணவியும், நண்பரும் சப்டார்ஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மாணவியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையின்ர வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை நடத்திய கணக்கெடுப்பில் டெல்லியில் 80 சதவிகித பெண்கள் பாதுகாப்பின்மையை கண்டு அஞ்சுவதாக தெரிவிக்கபட்டிருந்தது.
இந்த நிலையில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் டெல்லியில் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.