Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடும் பஸ் க‌ல்லூ‌ரி மாண‌வியை கற்பழி‌த்து ‌வீ‌சிய கு‌ம்ப‌ல்- டெ‌ல்‌லி‌யி‌ல் தொடரு‌ம் அவல‌ம்

ஓடும் பஸ் க‌ல்லூ‌ரி மாண‌வியை கற்பழி‌த்து ‌வீ‌சிய கு‌ம்ப‌ல்- டெ‌ல்‌லி‌யி‌ல் தொடரு‌ம் அவல‌ம்
, திங்கள், 17 டிசம்பர் 2012 (10:18 IST)
இரவு நேர‌த்‌தி‌ல் ஓடு‌ம் பேரு‌ந்‌தி‌ல் க‌ல்லூ‌ரி மாண‌வி ஒருவ‌ர் ம‌ர்ம கு‌ம்பலா‌ல் க‌‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்டு ‌வீச‌ப்ப‌ட்ட கொடுமை தலைநகர் டெல்லியில் அர‌ங்கே‌றியு‌ள்ளது பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

டெல்லியில் உள்ள த்வாரகா என்னும் இடத்திலிருந்து மு‌‌னிர்காவி‌ற்கு செல்லும் பேருந்தில் நேற்‌றிரவு கல்லூரி மாணவியும் அவரின் நண்பரும் பயணம் மேற்கொண்டனர்.

அப்பேருந்து, மகிபால்பூர் நிறுத்த‌த்‌தி‌ல் பேரு‌ந்து ‌நி‌ன்றபோது க‌ல்லூ‌ரியை மாணவியை மர்ம கும்பலல் கற்பழி‌த்தது. இதனை த‌ட்டி‌க்கே‌ட்ட பெ‌ண்‌ணி‌ன் ந‌ண்பரை தா‌க்‌கிய கு‌ம்ப‌ல் பேரு‌ந்த‌ி‌ல் இரு‌ந்து வெ‌ளியே தூ‌க்‌கி ‌வீ‌சியது. ‌பி‌ன்ன‌ர் க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட பெ‌ண்ணை பேருந்திலிருந்து வெளியே வீ‌‌சிய கு‌ம்ப‌ல் அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பியது.

பலத்த காயமடைந்த க‌ல்லூ‌ரி மாண‌வியு‌ம், ந‌ண்பரு‌ம் சப்டார்ஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி‌ன்றன‌ர். இ‌தி‌ல் மாண‌வி‌யி‌ன் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவ‌ல்துற‌ை‌யி‌ன்ர வழக்கு‌ப்பதிவு செய்து விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

அண்மையில் டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை நடத்திய கணக்கெடுப்பில் டெல்லியில் 80 சதவிகித பெண்கள் பாதுகாப்பின்மையை கண்டு அஞ்சுவதாக தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த நிலையில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் டெல்லியில் தொடர்ந்த வ‌ண்ணம் இரு‌க்‌கி‌ன்றன.

Share this Story:

Follow Webdunia tamil