கேரள எல்லையான களியக்காவிளை அருகே பூவாறு பகுதியில் காயலும், கடலும் சேரும் பொழிமுகப் பகுதி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி தற்போது சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இதையடுத்து கேரள சுற்றுலாத்துறை சார்பில் இங்கு படகு சவாரி மற்றும் பயணிகள் ஆயுர்வேத மசாஜ் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து இங்கு ஏராளமான உல்லாச விடுதிகள், லாட்ஜுக்கள், நட்சத்திர ஓட்டல்கள் முளைத்தன. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு சென்று வந்தனர்.