Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.டி. நிறுவன பெண் கற்பழிப்பு வழக்கில் உல்லாச விடுதி ஊழியர்கள் இருவர் கைது

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2013 (19:52 IST)
பெங்களூர் ஐ.டி. நிறுவன பெண்ணைக் கற்பழித்த வழக்கில் உல்லாச விடுதி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
FILE

கேரள எல்லையான களியக்காவிளை அருகே பூவாறு பகுதியில் காயலும், கடலும் சேரும் பொழிமுகப் பகுதி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி தற்போது சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இதையடுத்து கேரள சுற்றுலாத்துறை சார்பில் இங்கு படகு சவாரி மற்றும் பயணிகள் ஆயுர்வேத மசாஜ் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து இங்கு ஏராளமான உல்லாச விடுதிகள், லாட்ஜுக்கள், நட்சத்திர ஓட்டல்கள் முளைத்தன. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு சென்று வந்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 28 பேர் இங்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் பூவாறில் உள்ள ஒரு உல்லாச விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இதில் சில பெண்களும் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் 41 வயதான பெண் ஊழியர் ஒருவர் விடுதியில் உள்ள அறையில் தனியாக தங்கினார். இரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் இவரது அறைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரமும் செய்தனர்.

இதுபற்றி அந்த பெண், பொழியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உல்லாச விடுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், உல்லாச விடுதியில் பணிபுரிந்த 2 வாலிபர்கள் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது. மேலும் இந்த வாலிபர்கள்தான் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்களா? என்பதை கண்டறிய அந்த வாலிபர்களுக்கும் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன் முடிவு தெரிந்த பின்பே பெண்ணை பலாத்காரம் செய்தது இவர்கள் தானா? என்பது தெரிய வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!