ஏர் இந்தியா விமானங்கள் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பயணிகள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் இன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர்கள் வெடித்தன.
ஐ.சி 113 என்ற ஏர் இந்தியா விமானம் போபாலிலிருந்து டெல்லி வந்தது. இதில் சுமார் 100 பயணிகள் பயணம் செய்தனர்.
இன்று காலை 11 மணியளவில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியபோது டயர்கள் வெடித்தன.
விமானத்தை உடனடியாக நிறுத்தினார் விமானி. பயணிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.