சமாஜ்வாதி கட்சியின் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு பதவி உயர்வு ஒதுக்கீடு மசோதாவை அமைச்சர் நாராயணசாமி நிறைவேற்றினார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக கோரி பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர் மாநிலங்களவை தொடங்கியதும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு பதவி உயர்வு ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் ஐக்கிய முற்போக்கு கட்சியும், தேசிய ஜனநாயக கட்சியும் சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.
இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் நாராயணசாமி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்க்கான அரசு பதவி உயர்வு ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் உறுப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சமாஜ்வாதி கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து அவையில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு பதவி உயர்வு ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது அரசியலமைப்பிற்கு விரோதமானது . மசோதா குறித்து தங்கள் கட்சியிடம் கலந்து ஆலோசிக்க வில்லை. எனவே இந்த மசோதா நிறைவேற்றியதை மக்களிடம் எடுத்துரைக்க போவதாக அவர் கூறினார்.