Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.க்களுக்கு லஞ்சம்: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கெடு

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (19:23 IST)
நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையை முடிக்க டெல்லி காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, 3 பா.ஜனதா எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் சமாஜ்வாதிக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான அமர்சிங்கிடம் டெல்லி காவல்துறையினர் அண்மையில் விசாரணை நடத்தியதோடு, சிலரை கைதும் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று டெல்லி காவல்துறை தாக்கல் செய்தது.

அப்போது, இந்த வழக்கு குறித்த புலன் விசாரணையை இன்னும் 4 வார காலத்திற்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்,எம்.பி.க்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான மூல வேரை கண்டறியுமாறும் ஆணை பிறப்பித்தது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments