''ஊழல் போன்ற மக்கள் விரோதத்தை எதிர்த்து கார்ட்டூன்களை வரைவேன்'' என கார்ட்டூனிஸ்ட் அஸ்ஸீம் திரிவேதி கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரே சென்ற ஆண்டு துவங்கிய போது, மத்திய அரசை அவமரியாதை செய்யும் விதமாக கார்ட்டூன்களை வெளியிட்டதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அஸ்ஸீம் திரிவேதியை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் மகாராஷ்ட்ரா அரசின் பரிந்துரையின்படி திரிவேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தனது சொந்த கிராமத்திற்கு சென்ற திரிவேதியை கிராம மக்களும் இளைஞர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அப்போது பேசிய அஸ்ஸீம் திரிவேதி, கைதுக்கு நான் பயப்படமாட்டேன். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து என்னுடைய கார்ட்டூன்கள் வெளியாகி விஷத்தை கக்கும் என்றார்.
மேலும் தனது கார்ட்டூன் மக்களிடத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.