Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை 3 முறை ஒத்திவைப்பு

Webdunia
புதன், 29 ஜூலை 2009 (16:02 IST)
மக்களவை இன்று பிற்பகல் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கூடியதும், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் கூட்டறிக்கை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், மக்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 3 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து அவைத் தலைவர் மீரா குமார் உத்தரவிட்டார்.

அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்றிருந்த பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியுடன் நடத்திய பேச்சுகளுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

பயங்கரவாதப் பிரச்சினையைத் தனியாகப் பிரித்து, அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க அனுமதித்ததன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விட்டுக்கொடுத்ததாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குறைகூறின.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments