Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடியூரப்பாவை நீக்கியதில் வருத்தம் இல்லை: அத்வானி

எடியூரப்பாவை நீக்கியதில் வருத்தம் இல்லை: அத்வானி
பனாஜி , புதன், 2 நவம்பர் 2011 (14:06 IST)
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, கட்சி எடுத்த முடிவு குறித்து தமக்கு வருத்தம் இல்லை என்று பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

பனாஜியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர், ஊழலை பா.ஜனதா கடுமையாக எதிர்ப்பதினால்தான் கர்நாடகாவில் கட்சிக்கு பிரச்சனையே என்றார்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை திடமாக மேற்கொள்ள வேண்டும்.அது காங்கிரஸ் ஆனாலும் சரி;அல்லது பா.ஜனதாவானாலும் சரி;அது குறித்து எனக்கு வருத்தம் இல்லை என்று அத்வானி மேலும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil