''காங்கிரஸ் ஊழல்களினால் திணறி வருகிறது'' என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாற்றியுள்ளார்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர், நிலக்கரி சுரங்கங்கள் காங்கிரஸ் அமைச்சர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஊழல்களினால் காங்கிரசின் செல்வாக்கு பெரும் சரிவைக் கண்டுள்ளது என்றும் முலாயம் சிங் கூறினார்.
சாமானிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எந்த நன்மையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
பா.ஜ.க.வால் நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வர முடியாது என்றும் முலாயம் கூறினார்.