உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்த மாவட்டங்களில் மக்களவைத் தேர்தலின்போது, பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதல்வர் மாயாவதி நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
பணியிட மாறுதல் நடவடிக்கையை எதிர்த்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிபதிகள், மாயாவதி அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளனர்.