Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்துறை அமைச்சகத்தில் கைரேகை வருகை பதிவேடு முறை அறிமுகம்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (19:32 IST)
உள்துறை அமைச்சகத்தில் உள்ள அலுவலகங்களில் 'பயோமெட்ரிக்' எனப்படும் கைரேகை வருகை பதிவேடு முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உள்துறை அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த் பிளாக், ஜெய் சல்மார் ஹவுஸ் மற்றும் லோக்நாயக் பவன் ஆகிய 3 கட்டிடங்களிலும் உள்ள பல்வேறு நுழைவு வாயில்களில் 15 இணைய அடிப்படையிலான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கைரேகை வருகை பதிவேட்டு முறையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலை தொடங்கி வைத்தார். உடனடியாக இந்த முறை அமலுக்கு வந்தது.

உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், இனி காலையில் அலுவலகம் வரும்போதும் மாலையில் பணி முடிந்து திரும்பும் போதும் கைரேகைகள் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments