''உலகிற்கே ஒரு முன்னுதாரண மாநிலமாக குஜராத் திகழ்கிறது'' என்று அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்லைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மோடி இவ்வாறு உரையாற்றினார்.
உலகமும், நாடும் குஜராத் மாநில அரசின் வளர்ச்சியை பாராட்டி வருகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து சாதனைகளை குஜராத் எட்டியுள்ளது என்று கூறியுள்ள மோடி, உலகிற்கே ஒரு முன்னுதாரண மாநிலமாக குஜராத் திகழ்கிறது என்றார் பெருமிதத்துடன்.
நிலநடுக்கம், கலவரம் உள்ளிட்டவற்றில் இருந்து 3 ஆண்டில் குஜராத் மீண்டுள்ளது என்றும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவத்துக்கும் எடுத்துக்காடாக குஜராத் திகழ்கிறது என்றும் மோடி கூறினார்.