Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேசம், கோவாவில் பிரசாரம் இன்றுடன் ஓய்வு!

Webdunia
வியாழன், 1 மார்ச் 2012 (12:53 IST)
உத்தரப்பிரதேசம்,கோவா மாநிலங்களில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.

உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகிற 3 ஆம் தேதி நடைபெறுகிறது.

உ.பி.யில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கி 6 கட்ட தேர்தல் அமைதியான முறையில் முடிவடைந்தது.

7 ஆவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வருகிற 3 ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் 60 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த சில நாட்களாக நடந்த தலைவர்களின் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.வருகிற சனிக்கிழமையன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதேப்போல் கோவா மாநில சட்டசபைக்கும் 3 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.கோவாவில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.இவைகளுக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இங்கும் தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது.அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments