உத்தரபிரதேசத்தில் இன்று நடைபெற்ற 6 ஆவது கட்ட தேர்தலில் 57 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 மாவட்டங்களிலுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தபோது, சராசரியாக 57 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.