Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணை கற்பழித்த காவல் துறை அதிகாரி தலைமறைவு

Webdunia
திங்கள், 3 ஜூன் 2013 (12:07 IST)
FILE
பஞ்சாப் மாநிலத்தில் தனியே இருந்த நர்சிங் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய காவல் துறை அதிகாரி ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரோஸ்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், அப்பகுதியில் தனியாக சென்றுக்கொண்டிருந்த ஒரு நர்சிங் மாணவியை வழிமறித்து மிரட்டினார்.

சுமார் 22 வயது நிரம்பிய அப்பெண்ணிடம், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிடுவதாக மிரட்டிய காவல் துறை அதிகாரி, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் அந்த மாணவியை மருத்துவ கல ்லூரி வெளியே தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

வழிப்போக்கர்களால் மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் தலைமறைவாகியுள்ள காவல் துறை அதிகாரியை தீவிரமாக தேடிவருகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!