பஞ்சாப் மாநிலத்தில் தனியே இருந்த நர்சிங் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய காவல் துறை அதிகாரி ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பெரோஸ்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், அப்பகுதியில் தனியாக சென்றுக்கொண்டிருந்த ஒரு நர்சிங் மாணவியை வழிமறித்து மிரட்டினார்.சுமார் 22 வயது நிரம்பிய அப்பெண்ணிடம், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிடுவதாக மிரட்டிய காவல் துறை அதிகாரி, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர் அந்த மாணவியை மருத்துவ கல்லூரி வெளியே தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
வழிப்போக்கர்களால் மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் தலைமறைவாகியுள்ள காவல் துறை அதிகாரியை தீவிரமாக தேடிவருகின்றனர்.