Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய தடை !

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2013 (12:57 IST)
FILE
பீகார் மாநிலத்தில் உள்ள மக்னுபூர் கிராமத்தில் இளம்பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள மக்னுபூர் என்னும் கிராமம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்திலிருந்து 3 இளம் பெண்கள் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, தற்போது அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

மாயமான 3 இளம்பெண்களின் நிலையை குறித்து கிராம மக்கள் விவாதித்தபோது, மூன்று பெண்களும் எப்போதும் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிந்து, அதிக நேரம் செல்போனில் பேசிகொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இனி இளம் பெண்கள் யாரும் ஜீன்ஸ், டி - ஷர்ட் உள்ளிட்ட உடைகளை அணியக்கூடாது என்று மக்னுபூர் கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனுடன் இளம்பெண்கள் செல்போன் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து முடிவை மீறி இளம்பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிந்தாலோ அல்லது செல்போனில் பேசுவது தெரிய வந்தாலோ அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்னுபூர் கிராமத்தை சேர்ந்தவர் கூறுகையில், இளம் பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் போன்ற உடைகளை அணிவதும், செல்போனில் அடிக்கடி உரையாடுவதும் தான் காதலில் சிக்கிக்கொள்ள முக்கிய காரணம். இதனால் பல பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறி ஆதரவற்ற நிலையில் துன்பப்படுகிறார்கள்.

இவையனைத்தையும் கருத்தில் கொண்டுதான் எங்களது கிராமத்தில் இளம் பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் போன்ற உடைகளை அணிவதற்கும், செல்போன் உபயோகிபதற்கும் தடை விதித்துள்ளோம். இந்த தடையை அமல்படுத்த 11 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளோம் என தெரிவித்தனர்.

பீகாரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 20 கிராம பஞ்சாயத்துக்கள் இளம் பெண்கள் செல்போனில் பேச தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments