Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை வளங்கள் கொள்ளை- சோனியா குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2012 (14:36 IST)
உத்தரகண்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தீர்வுகாண ஒரே வழி ஆட்சி மாற்றம்தான் என்றும் சோனியா காந்தி வலியுறுத்தினார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தைத் துவங்கிய சோனியா இவ்வாறு கூறியுள்ளார்.

ரூர்க்கியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், மாநிலத்தின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது எனத் தெரிவித்தார்.

மோசமான அரசியல் காரணமாக உத்தரகண்ட் தேக்கநிலையில் உள்ளது என பாஜக அரசைத் தாக்கிப் பேசிய சோனியா, முதல்வரை மாற்றுவது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாணமுடியாது; அரசையே மாற்றுவதுதான் சரியானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில் உத்தரகண்டில் முதல்வராக இருந்த ரமேஷ் போக்ரியாலை மாற்றிவிட்டு, பிசி.கந்தூரியை முதல்வராக பாஜக நியமித்திருந்ததைக் குறிப்பிட்டு சோனியா இவ்வாறு பேசினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments