Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். மனைவி மனுத்தாக்கல்

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2009 (11:07 IST)
நகரி: ஆந்திர மாநிலம் புலிவேந்தலா தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜய லட்சுமி போட்டியிடுகிறார். இதற்காக விஜய லட்சுமி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

ராஜசேகர ரெட்டி போட்டியிட்டு வென்ற புலிவேந்தலா தொகுதிக்கு வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜய லட்சுமி போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக விஜயலட்சுமி இன்று காலை தனது குடும்பத்தினருடன் ராஜசேகரரெட்டியின் சமாதிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

விஜய லட்சுமி வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, தனது மகனும், கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி, விவசாயத் துறை அமைச்சர் ரகுவீரா ரெட்டி, முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் தொண்டாசரேகா ஆகியோர் உடனிருந்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments