கடப்பா மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கடப்பா மக்களவைத் தொகுதி, புலிவெந்துலா பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சியை தொடங்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன். எனது கவனம் முழுவதும் புதிய கட்சி தொடங்குவதில் மட்டுமே உள்ளது என்றார்.
எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் மாநில அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை என்று கூறிய ஜெகன்மோகன் ரெட்டி, 2014 பேரவை பொதுத்தேர்தலை முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அந்த நாளுக்காகவே காத்திருக்கிறேன் என்றார்.
புலிவெந்துலா தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்றும் கடப்பா மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித் துள்ளார்.
புதிய கட்சியின் இப்போது பெயரை அறிவிக்க முடியாது என்று தெரிவித்த ஜெகன் மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 3ஆம் தேதி முதல் தனது "ஆறுதல் யாத்திரையை' தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.