Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் மாயம்?

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2009 (15:29 IST)
ஹைதராபாத்தில் இருந்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், சித்தூர் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை 8.45 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ராஜசேகர ரெட்டியின் விமானம் திட்டமிட்டபடி 10.40 மணிக்கு சித்தூர் மாவட்டத்திற்கு சென்றடைய வேண்டும்.

ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரின் விமானத்தைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

துவக்கத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்தகவலை சித்து மாவட்ட காவல்துறை துணை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மறுத்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ராஜசேகர ரெட்டி பாத்திரமாக இருக்கிறாரா? என்பது குறித்த தகவலை ஆந்திர அரசு அதிகாரிகள், காவல்துறையினர் இதுவரை உறுதி செய்யாததால் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பு நீடித்து வருகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments