Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திர முதல்வர் மரணம்: அமெரிக்க அரசு இரங்கல்

ஆந்திர முதல்வர் மரணம்: அமெரிக்க அரசு இரங்கல்
புதுடெல்லி , வியாழன், 3 செப்டம்பர் 2009 (13:12 IST)
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் மரணத்தில் உயிரிழந்ததற்கு, அமெரிக்க அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் அமெரிக்கத் தூதர் திமோத்தி ரோய்மர் இன்று வெளியிட்டுள்ள குறிப்பில், இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவை ஆதரித்தவர்களில் ராஜசேகர ரெட்டி குறிப்பிடத்தக்கவர்.

ஆந்திர மக்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் இடையே நட்புறவு, பொருளாதார உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil