ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சீமாந்திரா பகுதி அரசு ஊழியர்களும் 2 மாத தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் கடுமையாக போராடின.
ஆந்திர பிரதேச அரசு ஊழியர் சங்கத்தலைவர் அசோக்பாபு நிருபர்களிடம் கூறும்போது, "தெலங்கானா மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாகும் நடவடிக்கைகளை தடுக்க இந்த இறுதி வாய்ப்பை சீமாந்திரா பகுதி மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மசோதா நிறைவேறாமல் தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதில் தவறினால் மாநில மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். அதோடு உங்கள் அரசியல் வாழ்வு அழிந்துவிடும். மாநிலம் பிரிக்கப்பட்டால் அதற்கு மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களின் இயலாமை தான் காரணம்" என்றார். இன்று (திங்கட்கிழமை) முதல் மத்திய அரசு அலுவலகங்கள் மூடல் உள்பட பல்வேறு போராட்டங்களையும் அவர் அறிவித்தார்.
டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலம் பிரிப்பதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்.
நேற்று கிரண்குமார் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-