ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் இரண்டு மாணவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மற்ற மாணவர்கள் கதி என்ன என அஞ்சப்படுகிறது.
பேருந்தில் எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி. மாண்வர்கள் இருந்தனர். இவர்கள் சாய் தேஜா பள்ளி மாணவர்களாவர்.
30 குழந்தைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போனவரகளை மீட்கும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
பள்ளி வேன் தனியார் பள்ளிக்குச் சென்று திரும்பி கொண்டிருந்தது. ஆனால் இந்தத் திடீர் விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
ராஜ்முந்திரிக்கு 65 கிமீ தொலைவில் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மூத்த அதிகாரிகள் விரைந்தனர்.