தேசிய அளவில் சில பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக் க ப ா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நடவடிக்கை ஏடுத்து வருகிறது. அதில் அ.இ.அ. த ி. ம ு.க. வும் இடம்பெறுமா என்பதைப் பற்றி தற்போத ு எதுவும ் கூ ற இயலாத ு.
கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சியும் இந்திய தேசிய லோக்தளமும் தேசிய ஜனநாயக கூட்டண ி யில ் இருந்த ு பிரிந்து சென்றுவிட்டன. எனினும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் மட்டும் ப ா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறது.
அடுத்த மக்களவைத் தேர் த லின்போத ு, தேசிய அளவில் மேலும் இரண்டு அல்லது மூன்று கட்சிகள் ப ா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவற்றின் பெயர்களை தற்போது வெளியிட இயலாது.
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டு வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கடந் த உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் மாயாவதியுடன் கூட்டு வைத்ததால் ப ா.ஜ.க. வுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன், குறைந்த இடங்களையே பெற முடிந்தது. எனவே உ.பி.யில் இனிவரும் தேர்தலில் ப ா.ஜ.க. தனித்தே போட்டியிடும்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ப ா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானி அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுக்காலம் அவர் பதவி வகித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான வகையில் அவர் செயல்பட்டுள்ளார். எனவே ப ா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளும் அத்வானியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக ் கொள்வதில ் எந்தத் தயக்கமும் இருக்காது.