Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : 13 பேர் படுகாயம்!

அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : 13 பேர் படுகாயம்!

Webdunia

அஸ்ஸாம் மாநிலம் பன்கைகான் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்!

அஸ்ஸாம் மாநிலம் பன்கைகான் பகுதியில் பக்லதன் மார்க்கெட் உள்ளது. இப்பகுதி அருகே ரயில்வே கேட் மற்றும் அதிகளவில் கடைகள் இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் இப்பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். உல்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேபோல், கவுகாத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil