Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலகாபாத்தில் குளிருக்கு 4 பேர் பலி

அலகாபாத்தில் குளிருக்கு 4 பேர் பலி
, சனி, 2 ஜனவரி 2010 (19:21 IST)
அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் கடும் குளிருக்கு 4 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கடந்த 2 நாட்களில் மிக குறைந்தபட்ச அளவாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவானது.

கடும் பனிப்பொழிவினால் குளிர் தாங்க முடியாமல் இந்த மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு இதே அளவு வெப்பநிலையே பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil