மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நீரிழிவு மேலாண்மை அறுவைச் சிகிச்சைக்கு பின் 3 வாரங்களில் 17 கிலோ எடை குறைந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லிக்கு, நீரிழிவு மேலாண்மை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலையை பரிசோதிக்க மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெட்லியின் உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளதாகவும், அவரது உடலில் சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அறுவைச் சிகிச்சைக்கு பின் ஜெட்லி 3 வாரங்களில் 17 கிலோ குறைந்துள்ளதாகவும், அவரது உடலில் கிரியாடினின் அளவு குறைந்துள்ளதால் சிறுநீரக செயல்பாடு நன்றாக உள்ளதாகவும் தெரிவித்த மருத்துவர்கள், நாளை ஜெட்லி வீடு திரும்பிவாரென குறிப்பிட்டுள்ளனர்.