Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது துரதிருஷ்டவசமானது: அன்னா ஹசாரே கருத்து

Webdunia
சனி, 15 பிப்ரவரி 2014 (10:53 IST)
டெல்லி சட்டப்பேரவையில் ஜன்லோக்பால் நிறைவேற்றப்படாததை அடுத்து ,டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று டெல்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து தனது மந்திரிசபையின் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர், ராஜினாமா குறித்து ஜனாதிபதியின் முடிவு வரும் வரை மேலும் 5 நாட்கள் பதவியில் நீடிக்கும்படி டெல்லி மாநில அரசை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
FILE

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து டிவிட்டரில் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு

அன்னா ஹசாரே:லோக்பால் மசோதா மிக முக்கியமானது.அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது மிகவும் துரதிருஷ்டவசமானது.

லாலுபிரசாத் யாதவ்:அரவிந்த் கெஜ்ரிவால் தான் கொடுத்த வாக்குறுதிகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என்பதை அறிந்து கொண்டார்.எனவே பொறுப்புகளில் இருந்து தப்பிக்க ராஜினாமா செய்துள்ளார்.

பாரதீய ஜனதா தலைவர் ரவிசங்கர் பிரசாத்: ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்ற பாரதீய ஜனதா முழு ஆதரவை அளித்தது.ஆனால் இதை நிறைவேற்ற சட்டவிதிகளை பின்பற்றியிருக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments