இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து டிவிட்டரில் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு
அன்னா ஹசாரே:லோக்பால் மசோதா மிக முக்கியமானது.அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது மிகவும் துரதிருஷ்டவசமானது.
லாலுபிரசாத் யாதவ்:அரவிந்த் கெஜ்ரிவால் தான் கொடுத்த வாக்குறுதிகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என்பதை அறிந்து கொண்டார்.எனவே பொறுப்புகளில் இருந்து தப்பிக்க ராஜினாமா செய்துள்ளார்.
பாரதீய ஜனதா தலைவர் ரவிசங்கர் பிரசாத்: ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்ற பாரதீய ஜனதா முழு ஆதரவை அளித்தது.ஆனால் இதை நிறைவேற்ற சட்டவிதிகளை பின்பற்றியிருக்க வேண்டும்.