Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரவையிலிருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்: முரளி மனோகர் ஜோஷி

Webdunia
சனி, 2 ஜூலை 2011 (18:48 IST)
பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள ப.சிதம்பரத்தை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜோஷி கூறியிருப்பதாவது:

அமைச்சரவைமாற்றியமைக்கப்படும் என்ற நிலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

தேர்தல் முறைகேடுகளில் சிதம்பரம் ஈடுபட்டார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தான் 2ஜி அலைகற்றை ஊழல் நடந்துள்ளது.

அவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுதுதான் பாகிஸ்தானுக்கு தவறான தீவிரவாதிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.

அவருக்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு அமைச்சர் பதவியில் அவர் நீடிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments