ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை சென்று விட்டு திரும்பும் வழியில் 2 யாத்ரிகர்கள் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தனர்.
அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தைத் தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் அவர்கள் மரணம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு கடந்த ஜூன் 15-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 34 யாத்ரீகர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.