Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனில் ககோட்கர், மாதவன் நாயருக்கு தேசிய விருது

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (18:24 IST)
இந்திய அண ு சக்தி ஆணையத்தின் தலைவர ் அனில ் ககோட்கர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர ் ஜ ி. மாதவன் நாயர் ஆகியோருக்கு இந்த ஆண்டி‌ற்கான பாரத் அஸ்மிதா தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நமது நாட்டிற்கு இவர்கள் ஆற்றிய சீரிய சேவையைப் பாராட்டி இந்த விருதுகளை, புது டெல்லியில் இன்று ந ட‌ ந் த விழாவில், குடியரசு துணைத் தலைவர் எம ். ஹமீத ு அன்சாரி வழங்கினார்.

பாரத் அஸ்மிதா ஜன ஜாக்ரன்ட் ஸ்ரீஸ்தா விருது, மஸ்தூர் கிசான் சக்தி சங்கதனின் நிறுவனர்களான அருணா ராய், நிகில் டே, சங்கர் சிங் ஆகியோருக்கு இணைந்து அளிக்கப்பட்டது.

ஏழை எளியோருக்கு உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் இவர்கள் பணியாற்றி வருவதை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சேகர் சௌத ்‌ திரி, மர ா‌ ட்டிய‌த்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாவ்னா கவாலி ஆகியோருக்கும் விருதுகள் அளிக்கப்பட்டுள்ள ன.

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

Show comments