Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் குண்டுவெடிப்பு : மராட்டியத்தில் ஒருவர் கைது!

Webdunia
ஹைதராபாத்தில் சார்மினார் அருகில் உள்ள பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளை அளித்ததாகக் கூறப்படும் ஒருவனை மராட்டிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர்!

மராட்டிய மாநிலம் ஜால்னா நகரில் வசித்து வரும் ஷோயப் ஜோஹிர்தார், மசூதியில் வைக்கப்பட்ட வெடிபொருளை வாங்கித் தருவதற்கு உதவி புரிந்ததாக கைது செய்த மராட்டிய காவல் துறையினர், அவரை ஆந்திர காவல் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை ஜோஹிர்தார் பெற்றுத் தந்ததாக மராட்டிய காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 18 ஆம் தேதி மெக்கா மஸ்ஜித்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தை அடக்க காவல் துறையினர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments