Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மோகன் சிங் ராஜினாமா செய்யட்டும்: பா.ஜனதா காட்டம்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2010 (18:09 IST)
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை எதிர்கொள்ளட்டும் அல்லது ராஜினாமா செய்துவிட்டு போகட்டும் என்று பா.ஜனதா காட்டமாக கூறியுள்ளது.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று தே.ஜ.கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி, மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளான பி.ஜே. தாமஸை நியமித்தததற்காகவும் பிரதமரை அவர் கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களும், அதிகார தரகர்களுமே அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை எடுப்பதாக குற்றம் சாற்றிய அவர், நாடளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கவில்லை என்றால், ராசா தொலை தொடர்புதுறை அமைச்சராக நீடித்திருப்பார் என்று மேலும் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments