கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ள யோகா குரு பாபா ராம்தேவுக்கு ஆதரவு தெரிவித்த சமூக நல ஆர்வலர் அண்ணா ஹசாரே, அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தானும் கலந்துகொள்ள உள்ளதாக கூறினார்.
ஊழலை ஒழிக்கக் கோரி வரும் 4ஆம் தேதி முதல் பாபா ராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளார்.
ஊழல் எதிர்ப்பு மசோதா தொடர்பாக மத்திய அரசு தங்களை ஏமாற்றி வருகிறது அண்ணா ஹசாரே குற்றம்சாற்றியுள்ளார்.
வரும் 5ஆம் தேதி பாபா ராம்தேவ் போராட்டத்தில் பங்கேற்று ஊழலை கூட்டாக எதிர்க்க முடிவு செய்துள்ளதாக ஹசாரே தெரிவித்துள்ளார்.
லோக்பால் மசோதா தொடர்பாக பொதுநல அமைப்புகளிடையே பிளவு ஏதும் இல்லை என்றும் அண்ணா ஹசாரே கூறினார்.
எனக்கும், பாபா ராம்தேவுக்கும் இடையே லோக்பால் மசோதா தொடர்பாக இருவேறு கருத்துக்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.