நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது. மேலும் 5 நிறுவனங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான விசாரணைய மேற்கொள்ள சி.பி.ஐ இன்று ஐந்து நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கரில் உள்ள ஜஸ் இன்ப்ரா ஸ்ட்ரக்ட்சர், விம்மி ஐயன் அன்ட் ஸ்டீல், நவ் பாரத் ஸ்டீல், ஜெ.எல்.டி. எவ்டமால் மற்றும் ஏ.எம்.டி ஸ்டீல் ஆகிய ஐந்து நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு சுரங்கங்கள் ஒதுக்கீடு உறுதியை அளித்ததில் பங்களித்த பல மத்திய நிலக்கரி அமைச்சகம் மற்றும் மாநில அரசாங்க அதிகாரிகளின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதன் முதல் கட்டமாக இந்தியாவின் பத்து முக்கிய தொழில் நகரங்களாக கருதப்படும் தன்பத், ஹைதராபாத், நாக்பூர், மும்பைய், டெல்லி, கொல்கத்தா, புனேவில் உள்ள 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அடுத்த கட்டமாக இந்த விவகாரத்தில் பல முக்கிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிலக்கரி துறை அதிகாரிகள் என பலர் கைது செய்யப்படக்கூடும் என கூறப்படுகிறது.