பீகார் மாநிலம் புர்னியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசும்போது இவ்வாறு பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது:
மத்திய அரசின் ஊழல் பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, விலைவாசி பற்றியோ கேள்வி கேட்டால், அவர் பதில் அளிப்பது இல்லை. அவர் குற்றம் சாட்டுவதோடு சரி, பதிலே அளிப்பது இல்லை.
பீகார் முதலமைச்சர் (நிதிஷ்குமார்), பிரதமர் ஆகும் நினைப்பில் இப்போது சரியாக தூக்கம் வராமல் தவிக்கிறார். அவரது ஆணவம், எவரெஸ்ட் மலைச்சிகரத்தை விட உயர்ந்தது. பிரதமர் பதவிக்கு தன்னைப்போல திறமையானவர் உலகத்திலேயே யாரும் இல்லை என்று அவர் கருதுகிறார்.
3- வது அணி என்பது, முன்னாள் பிரதமர்களையும், பிரதமர் பதவி மீது ஆசை கொண்ட டஜனுக்கு மேற்பட்ட தலைவர்களையும் கொண்டது. அந்த அணியில் உள்ள தலைவர்கள் பலர், பிரதமர் பதவியை ஏற்பதற்காக, உடை எல்லாம் தைத்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.
அவர்கள் தேர்தல் நேர சத்தத்தால் விழித்துக் கொண்டனர். தேர்தல் முடிந்தவுடன், தூங்கப் போய்விட்டு, அடுத்த தேர்தல் வரும்போதுதான் கண் விழிப்பார்கள்.
அவர்கள், பீகாரில் கோசி நதி வெள்ளப்பெருக்கால் மக்கள் மடிந்தபோது வந்தார்களா? கண்ணீர் சிந்தினார்களா?
இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.