டெல்லி உயர் நீதிமன்றத்தில்ம் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி(ஹியூஜி) தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அந்த இயக்கம் சார்பில் அனுப்பியுள்ள இ மெயிலில்" டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்.
அப்சல் குருவுக்கு ( டெல்லி நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி) விதிக்கப்பட்ட மரணத்தண்டனையை உடனடியாக நீக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இதனை செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள முக்கிய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தையும் நாங்கள் தாக்குதலுக்கு குறிவைப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏ-வின் தலைவர் சின்ஹாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,குறிப்பிட்ட அந்த இ மெயிலின் உண்மைத்தன்மை குறித்து தெரிந்துகொள்ளும் முன்னர் அது குறித்து முன்கூட்டியே கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று பதிலளித்தார்.அதே சமயம் அந்த இ மெயிலில் குறிப்பிட்டுள்ள விடயத்தை தாம் கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.