டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி; சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவு வாபஸ்!
, திங்கள், 10 பிப்ரவரி 2014 (19:19 IST)
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஷோகீன் தனது ஆதரவை வாபஸ் பெற்றார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஷோகீன், தேர்தலின் போது கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாததால் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து கெஜ்ரிவாலுக்கு அரசுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.