Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொல்கத்தாவில் கற்பழிக்கப்பட்டதை அடுத்து தீக்குளித்த சிறுமி மரணம்; உடலை பெற தந்தை போராட்டம்

கொல்கத்தாவில் கற்பழிக்கப்பட்டதை அடுத்து தீக்குளித்த சிறுமி மரணம்; உடலை பெற தந்தை போராட்டம்
, புதன், 1 ஜனவரி 2014 (12:36 IST)
FILE
கொல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் 16 வயது சிறுமி கடந்த அக்டோம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு தொடர்ந்து அவர்கள் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அப்பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

ஆனால் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவனின் நண்பர்கள் தொடர்ந்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி கடந்த 23ம் தேதி தற்கொலை செய்து கொள்ள தீ வைத்துக் கொண்டார். பின்னர் அவரை காப்பாற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மரணம் அடைந்துவிட்டார்.

இதை தொடர்ந்து...

சிறுமியின் பெற்றோர் அவரது உடலை கேட்டுள்ளனர். ஆனால் போலீசார் உடலையும், இறப்பு சான்றிதழையும் கொடுக்க மறுத்துள்ளனர். சிறுமியின் தந்தை அங்கு டாக்சி ஓட்டி வருகிறார். டாக்சி ஓட்டுநகர்களுடன் சென்று உடலை எடுத்து வர முயன்ற போது போலீசார் தடுத்துள்ளனர். பின்னர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் அதிகாலை 2:30 மணிக்கு போலீசார் சிறுமியின் உடலை எடுத்து செல்ல அனுமதித்துள்ளனர்.

கற்பழித்தவர்கள் மற்றும் பெண்ணை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று சிறுமியின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து நீதி கிடைக்க போராடுவேன். அவர்களை விட மாட்டேன். அவர்கள் தூக்கில் தொங்கும் வரையில் எனது உயிரை விட மாட்டேன். இது சத்தியம் என்று சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil