Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலவரம் குறித்து சிதம்பரம் பேச.. காங். MP தூங்கினார்

கலவரம் குறித்து சிதம்பரம் பேச.. காங். MP தூங்கினார்
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (14:18 IST)
நிதி அமைச்சர் சிதம்பரம் ஜம்மு காஷ்மீர் கலவரம் குறித்து காரசாரமான அறிக்கையை வாசிக்கையில், காங்கிரஸ் எம். பி அயர்ந்து தூங்கிய காட்சி வெளியாகி இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்தும் பேச நாடாளுமன்எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி பேசினார்.

உள்துறை அமைச்சரசுஷில் குமார் ஷிண்டே உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

webdunia
ISRO


இதனை அடுத்து கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தார்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், ப.சிதம்பரதிற்கு பின்புறம் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி. பால்வை கோவர்த்தன் ரெட்டி அயர்ந்து தூங்கி விட்டார். ரெட்டி ஆந்திர மாநிலத்தில் இருந்து மேல் சபைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil