ஏர் இந்தியா விமானிகள் ஏப்ரல் 2-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு
, புதன், 28 மார்ச் 2012 (20:19 IST)
ஏர் இந்தியா விமானிகள் ஏப்ரல் 2-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த விமானிகளுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே பலமுறை பேச்சுவார்தைகள் நடைபெற்றது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததது. இந்த வேலை நிறுத்த முடிவால் சர்வதேச நாடுகளுக்கு செல்லும் விமான சேவை பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.