உத்தர பிரதேசத்தில் மூளை வீக்க நோய்க்கு குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர். 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் என்சிபெலாடீஸ் எனப்படும் மூளை வீக்க நோயால் கோரக்பூரில் இரண்டு குழந்தைகளும் மற்றும் குஷின்நகரில் ஒரு குழந்தையும் பலியாகியுள்ளனர்.
என்சிபெலாடீஸ் என்பது மூளையில் ஏற்படும் கடுமையான வீக்கம் ஆகும். மூளைக்காய்ச்சல் போலவே தலைவலி, காய்ச்சல், குழப்பம், சோர்பு ஆகிய அறிகுறிகளுடன் இந் நோய் வெளிப்பட ஆரம்பிக்கும்.
மேற்குறிய அறிகுறிகள் ஏற்பட்டு அதன் விளைவாக வலிப்பு, நடுக்கம், பிரமைகள், மற்றும் நினைவக சிக்கல்கள் போன்ற மூலை அயர்பாடுகளும் ஏற்படும். நாளடைவில் இந்த நோயின் தாக்கம் உயிரையும் எடுக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை இந் நோயால் உத்திர பிரதேசத்தில் மட்டும் 13 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறையின் கூடுதல் இயக்குனர் திவாகர் பிரசாத் தெரிவித்துள்ளார்.