உயிரோடு இருக்கும் 3 ஊழல் எதிர்ப்பாளர்களுக்கு இரங்கல் தெரிவித்த கெஜ்ரிவாலின் கூத்து!
, செவ்வாய், 11 மார்ச் 2014 (12:48 IST)
கடந்த சனிக்கிழமையன்று அரவிந்த் கெஜ்ரிவால் அகமாதாபாதில் மக்களிடையே பேசும்போது ஊழலை எதிர்த்ததற்காக கொலை செய்யப்பட்ட தகவலுரிமை சட்ட செயல் வீரர்கள் 4 பேருக்கு தான் இரங்கல் தெரிவிப்பதாக அறிவித்தார். உடனே கூட்டத்தில் லேசான சலசலப்பு எழுந்துள்ளது.
சலசலப்புக்குக் காரணம்: அவர்கள் 4 பேரில் 3 பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதே. உயிருடன் இருப்பவர்களையும் கெஜ்ரிவால் இப்படி கொலை செய்து விட்டாரே என்று சலசலப்பு எழ, அருகில் இருந்த ஆம் ஆத்மிக் கட்சியினருக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிவிட்டது.
கெஜ்ரிவால் கூறிய முதல் பெயர் அமித் ஜேதவா. இது சரியான பெயரே. சுரங்க மாபியா ஒருவரால் ஜேதவா குஜ்ராத் உயர்நீதிமன்ற வாசலில் 2010ஆம் ஆண்டு ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்டார்.