Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேசம், கோவாவில் பிரசாரம் இன்றுடன் ஓய்வு!

Webdunia
வியாழன், 1 மார்ச் 2012 (12:53 IST)
உத்தரப்பிரதேசம்,கோவா மாநிலங்களில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.

உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகிற 3 ஆம் தேதி நடைபெறுகிறது.

உ.பி.யில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கி 6 கட்ட தேர்தல் அமைதியான முறையில் முடிவடைந்தது.

7 ஆவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வருகிற 3 ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் 60 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த சில நாட்களாக நடந்த தலைவர்களின் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.வருகிற சனிக்கிழமையன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதேப்போல் கோவா மாநில சட்டசபைக்கும் 3 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.கோவாவில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.இவைகளுக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இங்கும் தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது.அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments