Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: கொழு‌ம்பு செல்கிறார் சிவசங்கர் மேனன்

Webdunia
வியாழன், 15 ஜனவரி 2009 (16:46 IST)
இரண்டு நாள் பயணமாக இன்றிரவு கொழும்பு செ‌ல்லு‌ம் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்க‌ர் மேனன், அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சவை நேரில் சந்தித்து போர் நிறுத்த குறித்து பேச்சு நடத்த உள்ளார்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற ு தமிழக தலைவர்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார்கள்.

தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்ற ு, அயலுறவு அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். ஆனால ், அவருடைய இலங்கை பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில ், அயலுறவு‌த்துறை செயலர் சிவசங்கர் மேனன் இன்றிரவு கொழு‌ம்பு செல்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இன்றிரவு இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் சிவசங்க மேன்ன, அதிபர் ராஜபக்ச, அந்நாட்டு அயலுறவு அமை‌ச்ச‌ர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களுடன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் தீவிர சண்டை நடத்தி வருகிறது. கடைசி கட்டமாக முல்லைத்தீவை மீட்க ராணுவம் போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில ், இந்திய அயலுறவுத்துறை செயலரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments