Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுதப் போட்டி இந்தியா விரும்பவில்லை : பிரதமர்!

Webdunia
சனி, 7 ஜூலை 2007 (16:19 IST)
எந்தவொரு நாட்டுடனும் அணு ஆயுதப் போட்டியில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியா அண்டை நாடுகளுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்தியா நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அண்டை நாடுகளுடன் நிலவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண இந்தியா விரும்புவதாக கூறினார்.

சர்வதேச அளவில் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலவும் சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பு கருதி ஆயுதங்களை தயார்படுத்த வேண்டியிருப்பதாகக் கூறிய மன்மோகன் சிங், எந்தவொரு நாட்டுடனும் ஆயுத போட்டியில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை என்றும் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments