அருணாசல பிரதேச மாநில முதலமைச்சர் டோர்ஜி காந்து மறைவையடுத்து புதிய முதலமைச்சராக ஜர்போம் கேம்லின் பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அருணாசல பிரதேச முதலமைச்சர் டோர்ஜி காந்துவின் உடல் 5 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இடா நகரில் நேற்றிரவு நடந்தது.
இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சராக 50 வயதான ஜர்போம் கேம்லின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் உடனடியாக, முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
கேம்லின் இதுவரை டோர்ஜியின் அமைச்சரவையில், மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.